search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இணைய தளம்"

    • ரூ.2.லட்சம் வரை கல்விஉதவித்தொகை தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
    • விண்ணப்பங்களை 15.1.2024-க்குள்ளும் அனுப்பி வைக்க வேண்டும் .

    கள்ளக்குறிச்சி, அக்.4-

    தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறு வனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஐ.ஐ.ஐ.டி., என்.ஐ.டி. மற்றும் மத்திய பல்கலை கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ் நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவ, மாணவியர் ஒருவருக்கு ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2.லட்சம் வரை கல்விஉதவித்தொகை தமிழ்நாடு அரசால் வழங்கப் பட்டு வருகிறது. மேலும், கல்வி உதவித் தொகைக்கு 2023-2024-ம் கல்வியாண்டில் புதியது மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பிக்க விரும்பும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான மாணவர்கள் பிற்படுத்த ப்பட்ட நல இயக்ககம், மிகப்பிற்படுத்தப் பட்டோர் நல இயக்ககம் அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலுவல கத்தை அணு கியோ அல்லது இணைய தள முகவரியிலிருந்தோ விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    மேலும், பிற்படுத்தப் பட்டோர், மிகப்பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சீர்மர பினர் மாணவர்கள் 2023-2024-ம் நிதி யாண்டிற்கான புதியது மற்றும் புதப்பித்தல் கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்விநிறு வனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதி யான விண்ணப்பத்தினை பரிந்துரை செய்து, ஆணை யர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்கம், எழிலகம் இணைப்பு கட்டடம், 2-வது தளம், சேப்பாக்கம், சென்னை என்ற முகவரிக்கு 15.12.2023 -க்குள்ளும் புதியது விண்ணப்பங்களை 15.1.2024-க்குள்ளும் அனுப்பி வைக்க வேண்டும் . இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • 5 திட்டங்கள் செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது
    • கலெக்டர் தகவல்

    திருவண்ணாமலை:

    மாற்றுத் திறனாளிகள் நலன் கருதி தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் செயல்ப டுத்தப்படும் திட்டங்களுக்கு இ- சேவை இணையதளம் வழி யாக மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பத்திற்கு பிரத்யேக இணைய தளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    மாற்றுத்திறனாளிகள் இணையதளத்தில் பதிவு செய்ய மாற் றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும். கல்வி உதவித்தொகை விண்ணப்பம், உதவி உபகரணங்கள் பெறுவதற்கான விண்ணப்பம், வங்கிக்கடன் மானியம் விண் ணப்பம், திருமண உதவித் தொகை விண்ணப்பம், மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை விண்ணப்பம் ஆகிய 5 திட்டங் கள் செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பங்களை இணையதள சேவை மூலம் பயன்படுத்த அருகாமையில் உள்ள இ-சேவை மையம் அல்லது https:/www.tnesevai.tn.gov.in/citizen/registration. aspx என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து அதற்கான ரசீதினை பெற்று கொள்ளலாம்.

    இந்த தகவலை கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

    ×